பெண்கள் ஒற்றை காலில் கயிறு கட்டுவது ஏன் தெரியுமா ?

பொதுவாக சிலர் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டி இருப்பார்கள். ஆனால் இது பலரும் ஏன்? எதற்காக கட்டுகின்றனர் என தெரியாது.
உண்மையில் இந்த கறுப்பு கயிறு சனீஸ்வர பகவானின் பார்வையின் வேகத்தை குறைக்கிறது.

ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் நம்மை சுற்றி தீய சக்திகள் நெருங்காது என்று சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமின்றி செய்வினை சூனியங்கள் நெருங்காது. கண் திருஷ்டி படாது.

கறுப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம்.
இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.
இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.
கயிறு கட்டி கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்
கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் விழுந்தாலும் மிகப் பெரிய ஆபத்து நேராமல் பாதுகாக்கும்.
நீண்ட கால தீராத நோய் இருந்தால், உடல் நல கோளாறுகள் இருந்தால், கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும்.

எதிர்மறை ஆற்றலில் தாக்குதல் குறையும். பருவமடைந்த ஆரம்பத்தில் வெளியே செல்லும் பெண்களுக்கு இதனை கட்டி விடுவது மிகப் சிறப்பு.