முதலிரவு அறைக்கு மகிழ்ச்சியாக சென்ற புதுமண தம்பதி: நள்ளிரவில் தூக்கில் தொங்கிய கணவர்!


 முதலிரவு அறைக்கு மகிழ்ச்சியாக சென்ற புதுமணத் தம்பதிகளில், புதுமாப்பிள்ளை நள்ளிரவில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருக்கும் பாலம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். டிரைவராக வேலை செய்து வரும் இவர், செவிலியராக வேலை செய்யும் தனது அத்தை மகளான நந்தினியை றேற்று முன்தினம் திருமணம் செய்துள்ளார்.

மணமகள் வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்த நிலையில், பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் புதுமணத்தம்பதிகள் முதலிரவு அறைக்குச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து பின்பு தூங்க சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு புதுப்பெண் பாதி தூக்கத்தில் கண்விழித்துப் பார்த்த போது, தலைக்கு மேலே கால்கள் தொங்குவதை கண்டு அதிர்ந்து போய் அண்ணாந்து பார்த்துள்ளார்.

கார்த்திகேயன் தூக்கிட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்ததை அவதானித்து கதறியழுது கூச்சல் போட்டுள்ளார். பின்பு பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், சரிவர தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

Comments