நயன்தாரா, விக்னேஷ் திருமணத்திற்கு பின்பு இப்படியொரு அதிர்ச்சி முடிவா?


நடிகை நயன்தாரா தற்போது பிஸியாக நடித்து வந்தாலும் திருமணத்திற்கு பின்பு திரையுலகினை விட்டு விலகவுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகின்றார். எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நிலையில், சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான 'நெற்றிக்கண்' பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்பொழுது தனக்கும், விக்கிக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினர். இதனால் விரைவில் திருமணம் செய்துகொண்டு, திரையுலகை விட்டு விலகிவிடுவார் என்று யூகங்கள் எழுந்து வருகின்றது.

தற்போது வெளியாகியுள்ள தகவலில் நயன்தாரா வரும் டிசம்பர் மாதத்திலோ, அல்லது 2022ம் ஆண்டில் தொடக்கத்திலோ திருமண வாழ்க்கையில் இணைவார் என கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்திவிட்டு, மற்ற வேலைகளை முன்னெடுக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வந்தாலும் இதுகுறித்து, நயன்தாரா தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

Comments