மாணவியை வீடியோ எடுத்த களவாணிகள் காதலன் போட்ட பிளான்


 ஆபாச வீடியோவை பிளான் பண்ணி எடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போதாது என்று பணம் மற்றும் நகையைப் பெற்ற களவாணிகளை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். ஒரு செக்கன் தான்… பேஸ்புக் லைக், ஒரு ஷேர்… அது ஒரு செக்கன் தான்… ஆனால் அதுவே உங்கள் வாழ்கையைப் புரட்டிப் போடும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன், இவருக்கு 21 வயது ஆகிறது. இவர் பேஸ் புக் ஊடாக 17 வயது மாணவி ஒருவரோடு பழக்கத்தில் இருந்துள்ளார். நாள் ஆக ஆக… இது காதலாக மலந்துள்ளது. ஒரு நாள ஆசை வார்த்தை பேசி சிவராமன், இந்த மாணவியை கீழவளவு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே தனிமையில் வைத்து மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ஏற்கனவே இவர் போட்ட திட்டம் இதுதான். 


மறைவிலிருந்த சிவராமின் நண்பர்களான, உதயகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர் இதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள். சற்று நேரத்தில் அங்கே வந்த 2 நண்பர்களும் வீடியோவைக் காட்டி மாணவியை மிரட்டி அங்கே வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததோடு, பின்னர் மிரட்டி பணத்தையும் பெற்று வந்துள்ளார்கள். பணம் கிடைக்காத சமயங்களில், அந்த மாணவி நகைகளையும் கொண்டு வந்து கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் தொல்லை அதிகரிக்கவே, மாணவி சென்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.


இதனை அடுத்து 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்த பொலிசார், லாடம் கட்ட, காதலன் அனைத்தையும் உளறிவிட்டான். எல்லாமே நான் போட்ட திட்டம் தான் என்று கூறியுள்ளான். மக்களே ஜாக்கிரதை, உங்கள் பெண் பிள்ளைகள் மோபைல் போனில் என்ன செய்கிறார்கள், என்பதனை அடிக்கடி கண்காணிப்பது நல்லது.

Comments